ஆகஸ்ட் 2 முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் - பள்ளிக் கல்வித்துறை

ஆகஸ்ட் 2 முதல் தினமும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருக்கிறது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக பள்ளிகள் இயங்கவில்லை. வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் முறையில் இணையவழியிலேயே நடைபெற்று வருகின்றன. தற்போது தமிழகத்தில் தொற்று குறைந்துள்ளதால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வந்து பணியாற்றுவது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது.

அதன்படி, ஆகஸ்ட் 2 முதல் தினமும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என தற்போது அறிவித்திருக்கிறது. மாணவர் சேர்க்கைப் பணிகள் மற்றும் கல்வித் தொலைக்காட்சி பணிகளுக்காக ஆசிரியர்கள் அனைவரும் தினமும் பள்ளிக்கு வந்து பணியாற்றுமாறு பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருக்கிறது. மேலும், பள்ளிக் கால அட்டவணை தயாரித்தல், பள்ளி வளாகங்களை தூய்மைப்படுத்தல் போன்ற பணிகளுக்காகவும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறது.

இதற்கிடையே கிராமப்புறங்களில் தொடக்கப்பள்ளிகளை திறப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/111222/Teachers-should-come-to-schools-regularly-from-August-2-onwards.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா