Posts

Showing posts from September, 2021

1 முதல் 8ம் வகுப்பு வரையில் வீடுகளுக்கு வரும் மக்கள் பள்ளி - தமிழக அரசு புதுத்திட்டம்

Image
தமிழகத்தில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று கற்பிக்கும் மக்கள் பள்ளி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.   தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டில் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கும் என அரசு அறிவித்துள்ளது.   அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தினாலும் அவர்களிடம் கற்றல் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை போக்குவதற்கு நடப்பு கல்வியாண்டிற்கான பட்ஜெட்டில் 200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் பள்ளிக்கல்வித்துறை மாணவர்களின் கற்றல் குறைப்பாடுகளை தீர்க்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.   அதன் அடிப்படையில், கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக 1 முதல் 8ஆம் வகுப்புகள் வரை அரசுப் பள்ளிகளில் படிக்கும் கற்றல் இ...

கலைக் கல்லூரிகள் - அக்.4 முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம்

Image
கலை, அறிவியல் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு அக்டோபர் 4ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான முதலாமாண்டு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் எப்போது தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்நிலையில், கல்லூரி கல்வி இயக்ககம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ' அனைத்து வகை கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு சேர்க்கை நிறைவு பெற்றுவிட்டது. அக்டோபர் 4ஆம் தேதி முதல் கலை, அறிவியல் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும். மாணவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும். உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நேரடி வகுப்புகளை தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்படுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/117440/arts-collages-will-be-open-from-October-4.html

சென்னை ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிக செவிலியர்கள், லேப் டெக்னீஷியன்கள் வேலைவாய்ப்பு

Image
சென்னை மாநகராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவற்றில் பணியாற்ற செவிலியர்கள், லேப் டெக்னீஷியன்கள், அலுவலக உதவியாளர், கணக்கு அலுவலர் உள்ளிட்டோர் தேவை என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 50 பணியிடங்களை நிரப்புவதற்கான இந்த அறிவிப்பை சென்னை மாநகராட்சி வெளியிட்டிருக்கிறது. தற்காலிக அடிப்படையில் 11 மாதங்களுக்கு பணியாற்ற தகுதி உடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். www.chennaicorporation.gov.in என்ற இணையதளம் மூலம் அக்டோபர் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்புடைய செய்தி: ராமநாதபுரம்: 8 வருடமாக இடிந்துவிழும் நிலையிலுள்ள தினைகுளம் துணை சுகாதார நிலையம் Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/117378/Employment-oppurtunity-of-Temporary-Nurses-and-Lab-Technicians-in-Chennai-Primary-Health-Centers.html

கேரளா: கண்ணூர் பல்கலைக்கழக பாடத்தில் தந்தை பெரியார் கருத்துருக்கள் சேர்ப்பு

Image
கேரள பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் பெரியாரின் கருத்துருக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.   கண்ணூர் பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டங்களை கல்வியியல் குழு மாற்றியமைத்துள்ளது. இதன்படி முதுகலை நிர்வாகவியல் மற்றும் அரசியல் படிப்பில் இடம்பெற்றிருந்த சங்பரிவார், தீன்தயாள் உபாத்யாய், பல்ராஜ் மதோக் உள்ளிட்டோர் தொடர்பான பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், நவீன அரசியல் சிந்தனையில் தேசமும் தேசியமும் என்ற தலைப்பில், சாவர்க்கர், கோல்வாக்கர், முகமது அலி ஜின்னா, மெளலான அபுல் கலாம் ஆசாத் உள்ளிட்டோரின் கருத்துருக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.   திராவிட தேசியம் என்ற பெயரிலான பாடத்தில் தந்தை பெரியாரின் கருத்துருக்களும் இடம் பெற்றுள்ளன. இ.எம்.எஸ். நம்பூதிரிபாட், ராம் மனோகர் லோஹியா ஆகியோரைக் குறித்த கருத்துருக்களும் பாடத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.   இதையும் படிக்க: அஜித் மட்டுமல்ல... இவரும் தன்னைத் தானே செதுக்கிக் கொண்டவரே! - விஜய் ஆண்டனியின் கதை Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu New...

காவிரியில் 9000 இல் இருந்து 10,500 கன அடியாக அதிகரித்த நீர்வரத்து

Image
கர்நாடக அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், காவிரி ஆற்றில் வினாடிக்கு 9 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, 10 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், ஒகேனக்கல் மெயினருவி, சினியருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. செப்டம்பர் மாதத்திற்கு தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை திறந்து விட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளதால், நீர்திறப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய நீர் ஆணைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனைப்படிக்க... கோவை: ரயிலுக்கு அடியில் படுத்திருந்த போதை நபரால் துடியலூர் ரயில் நிலையத்தில் பரபரப்பு  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM source http://puthiyathalaimurai.com/newsview/117279/Increased-water-level-in-the-Cauvery-from-9000-to-10-500-cubic-feet.html

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு

Image
செப்டம்பர் 12ஆம் தேதி நடந்த நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். ஏற்கெனவே நடந்த நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு புதிதாக தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என மாணவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் வினாத்தாளை பயிற்சி மையங்களில் முன்கூட்டியே வழங்கி முறைகேடு நடந்துள்ளதாகவும், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்துள்ளதாகவும் மாணவர்கள் புகார் அளித்துள்ளனர். மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் நீட் மருத்துவ நுழைவுத்தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.   இதனைப்படிக்க... 'ரூ.70,000 கோடிக்கு வர்த்தகம்' - நீட் பயிற்சி மையங்களின் வருவாயும், அரங்கேறும் மோசடிகளும்!  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/117253/Case-in-the-Supreme-Court-seeking-cancellation-of-NEET-exam.html

“6 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு இப்போதைக்கு இல்லை” - மக்கள் நல்வாழ்வுத்துறை

Image
முதல்வருடனான கலந்தாலோசனையில், “6 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு இப்போதைக்கு இல்லை” என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தியிருந்தார். இந்த ஆலோசனைக்கூட்டத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்தும், வெள்ளி, சனி, ஞாயிறன்று வழிபாட்டுத் தலங்களில் தரிசனத்திற்கான தடையை நீக்கக் கோருவது பற்றியும் முடிவெடுக்கப்படலாம் என்று கணிக்கப்பட்டது. இதற்கு நிபுணர் ஆலோசனை பெறப்படும் என சொல்லப்பட்டிருந்தது. தொடர்புடைய செய்தி: 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பு எப்போது? - முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை அந்த நிபுணர் ஆலோசனையின்போது தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், பள்ளிகளைத் திறக்க வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இத்துறை தற்போது தொற்று அதிகரித்து வரும் மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்திவருவதாகவும், அக்டோபர் இறுதிக்குள் 75% மக்களுக்கு முதல் தவணை தடு...

35 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை ஊதியம் - அரசுப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்

Image
தமிழ்நாடு அரசின் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (Medical Service Recruitment Board) மூலம் 119 உணவு பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் மருத்துவப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் உணவு பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களுக்கு அடுத்த மாதம் 21-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை www.mrb.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் அறிந்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கான அடிப்படை ஊதியம் 35ஆயிரத்திலிருந்து தொடங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/117207/food-safety-officer-job-vacancy-announced-by-tamilnadu-government.html

மலை நெல்லிக்காய்: விளைச்சல் அதிகரித்து விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி

Image
போடி மலைபகுதியில் சாகுபடி செய்யப்படும் மலை நெல்லிக்காய் விளைச்சல் அதிகரித்து விலை கனிசமாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டம் போடி ஒன்றியத்தில் உள்ள பெரியாத்துகோம்பை, வலசத்துறை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் மலை நெல்லிக்காயை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில், என்.ஏ 7 காஞ்சன், கிருஸ்ணா, சக்காய போன்ற நெல்லிக்காய் ரகங்கள் இப்பகுதியில் விளைவிக்கப்படுகிறது. 24 மாதங்களில் பலன் தரக்கூடிய நெல்லிக்காய் விவசாயத்தில் ஆண்டுக்கு 3 முறை வருமானம் பெறலாம். மருத்துவ குணம் நிறைந்த மலை நெல்லிக்கு உள்ளுர் மற்றும் வெளி மாவட்டங்களில் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது மலை நெல்லியின் விளைச்சல் அதிகரித்து விலை கணிசமாக உயர்ந்துள்ளதால் நெல்லி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM source http://puthiyathalaimurai.com/newsview/117183/Mountain-Gooseberry-Farmers-are-happy-with-the-increase-in-yield-and-rising-prices.html

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழுநேர தலைவர் நியமனம்

Image
காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழுநேர தலைவராக எஸ்.கே.ஹல்தார் நியமிக்கப்பட்டுள்ளார். காவிரி மேலாண்மை ஆணையத்தின் முழுநேர தலைவராக சவுமித்ரகுமார் ஹல்தாரை நியமித்துள்ளது மத்திய அரசு, இவர் 5 ஆண்டு காலம் பதவியில் இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நீர்வளத்துறை ஆணையத்தின் தலைவராக உள்ள எஸ்.கே.ஹல்தர் தற்போது காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது காவிரி மேலாண்மை ஆணையத்தின் இடைக்கால தலைவராகவும் இருந்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  இதனைப்படிக்க... 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பு எப்போது? - முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை      Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM source http://puthiyathalaimurai.com/newsview/117165/Appointed-full-time-chairman-of-the-Cauvery-Management-Authority.html

விவசாயிகளுடன் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

Image
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது குறைகளை பிரதமர் நரேந்திர மோடி கேட்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் விவசாயிகள் அமைப்பு சார்பில் முழு அடைப்பு போராட்டடம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் மத்திய அரசை கண்டித்து ரயில், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளை அழைத்து அவர்களது குறைகளை பிரதமர் நரேந்திர மோடி கேட்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து, பேசிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்காத காரணத்தினால் தான் நாடு தழுவிய அளவில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர் எனத் தெரிவித்துள்ளார். இதனைப்படிக்க... பாரதிய ஜனதா ஒரு பகட்டுச் சொல்லாட்சி கொண்ட கட்சி : மம்தா பானர்ஜி  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM source http://puthiyathalaimurai.com/newsview/117128/...

விளைச்சல் இருந்தும் விலையில்லை: தக்காளியை சாலையோரம் கொட்டும் தருமபுரி விவசாயிகள்

Image
தருமபுரி மாவட்டத்தில் தொடர் மழையால் தக்காளி விளைச்சல் அதிகரித்தும் போதிய விலை கிடைக்காததால் சாலையோரம் கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். இங்கு விளைவிக்கப்படும் தக்காளியை விவசாயிகள், பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டில் இருந்து சென்னை, பெங்களூர், ஓசூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. இந்நிலையில், மார்கெட்டில் விற்பனைக்கு வரும் தக்காளியின் அளவு அதிகரித்துள்ளதால், விலை சரிந்து கிலோ ரூ.4-க்கு விற்பனையாகிறது. இதனால் போதிய வருவாய் கிடைக்காமல் விவசாயிகள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர். மேலும் விலை குறைவாக இருப்பதால், அறுவடை செய்யும் கூலி கூட கிடைக்கவில்லை. இதனால் தக்காளியை விற்பனை செய்யாமல் விவ...

புகையிலை பொருட்களை விற்பனை செய்பவரின் மகன் சிவில் சர்வீஸ் தேர்வில் 2வது முறையாக தேர்ச்சி

Image
பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் உள்ள பகிரிபரவன் (Pakribarawan) வட்டத்தை சேர்ந்தவர் நிரஞ்சன் குமார். புகையிலை பொருட்களை விற்பனை செய்பவரின் மகனான இவர் இரண்டாவது முறையாக UPSC சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார். இதன் மூலம் தனது மாவட்டத்திற்கு புகழ் தேடி தந்துள்ளார். அவர்  கடந்த 2016-இல் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற அவர் 728-வது ரேங்க் எடுத்திருந்தார். இந்த முறை 535-வது ரேங்க் எடுத்துள்ளார்.  இந்திய வருவாய் துறை அதிகாரியான அவர் தற்போது டெல்லியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் துணை கமிஷனராக பணியாற்றி வருகிறார்.  இருந்தும் ஆட்சியர் ஆவதே தனது இலக்கு என்ற நோக்கத்துடன் மீண்டும் முயற்சித்த அவர் இந்த முறை முன்பை காட்டிலும் ரேங்க் பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளார். அவரது இந்த சாதனையை கண்டு அவரது தாயார் யசோதா தேவியின் கண்களில் ஆனந்தக்கண்ணீர் நிறைந்துள்ளது. கொரோனா முடக்கத்தால் அவரது தந்தை கடையை திறக்கவில்லை என தெரிகிறது. வறுமை தங்கள் குடும்பத்தை வாட்டி வதைத்த போதும் பிள்ளையின் கல்வியை ஒருபோதும் அவர்கள் மறுப்பு சொன்னதில்லையாம். அதன் பலனாக இன்று ...

கேரளாவில் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான சிறார்களை மீட்க மீட்பு மையங்கள்: பினராயி விஜயன்

Image
கேரளாவில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகியுள்ள சிறார்களை மீட்க, மீட்பு மையங்களை அமைத்திட முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். மாணவர்களின் ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு சவாலாக உள்ள ஆன்லைன் விளையாட்டுகளிலிருந்து பள்ளி மாணவர்களைக் காக்க, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கேரளாவில் ஏற்கனவே சிறார்களை பாதுகாத்திடும் வகையில், மாநிலம் முழுவதும் காவல் நிலையங்களில் ஏற்பாடுகளை மேற்கொள்ள முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக, ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையான சிறார்களை மீட்பதற்காக சிறப்பு மீட்பு மையங்களை அமைக்க பினராயி விஜயன் ஆணையிட்டுள்ளார். போதை மறுவாழ்வு மையங்களைப் போல இந்த மையங்கள் செயல்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். அந்த மையங்களில் ஆன்லைன் விளையாட்டுகள் என்பது மாய உலகம் என்ற உண்மையை சிறார்களுக்கு உணர்த்திட நிபுணர்களைக் கொண்டு கவுன்சிலிங் வழங்கப்பட உள்ளன. இதனைப்படிக்க... "புவி வெப்பமயமாதல் எங்களுக்கு மரண தண்டனை" – ஐநா சபையில் தீவு நாடுகள் குமுறல்  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyatha...

கர்நாடகா அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் நீர் திறப்பு குறைந்தது

Image
கர்நாடகா அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கான நீர்வரத்து சரிந்துள்ளது. இதனால் இன்று காலை நிலவரப்படி இரு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் வினாடிக்கு 10 ஆயிரத்து 166 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதன்காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் சரியத்தொடங்கியுள்ளது. இதனைப்படிக்க... ஆன்லைன் அபாயங்கள் - மாணவர்களை காக்க வழிகாட்டுதல்களை வெளியிட்ட அரசு  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM source http://puthiyathalaimurai.com/newsview/116887/Water-discharge-in-the-Cauvery-River-from-the-Karnataka-dams-is-low.html

செவித்திறன் குறைபாடு தடையல்ல; தமிழை விருப்ப பாடமாக்கி சிவில் சர்வீஸ் வென்ற ஈரோடு இளைஞர்

Image
காது கேளாத தமிழக இளைஞரொருவர் யு.பி.எஸ்.சி., சிவில் சர்வீஸ் தேர்வில் 750-வது இடம் பிடித்து சாதனை செய்துள்ளார். ஈரோட்டை சேர்ந்த 27 வயதான காது கேளாத இளைஞர், பல்வேறு தடைகளை தகர்த்து தமிழ் மொழியை விருப்ப பாடமாக எடுத்து யு.பி.எஸ்.சி., சிவில் சர்விஸ் தேர்வில் தனது முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார். தொடர்புடைய செய்தி: யுபிஎஸ்சி தேர்வில் முதல் 2 இடங்களை பிடித்த பொறியியல் பட்டதாரிகள் கோவை சர்வதேச விமான நிலையம் அருகில் வசித்து வரும் தர்மலிங்கம், அமிர்தவள்ளி தம்பதியரின் இரண்டாவது மகன் ரஞ்சித். சிறு வயதிலிருந்தே காதுகேளாத குறைபாடு கொண்ட ரஞ்சித், தனது பெற்றோர்களின் உதவியால் நம்பிக்கையுடன் படிப்பில் கவனம் செலுத்திவந்துள்ளார். 12-ஆம் வகுப்பில் காதுகேளாத மாணவர்களின் பட்டியலில், மாநில அளவில் முதலிடம் பிடித்து படிப்பில் தனது திறமையை வெளி உலகத்திற்கு காட்டினார் ரஞ்சித். பிறகு கல்லூரியில் மெக்கானிக் பொறியியல் படிப்பிலும் 80 சதவீத மதிப்பெண்களுடன் வெற்றி பெற்று பணியில் சேர்ந்துள்ளார். அதில் பல நிறுவனங்கள் அவருடைய காதுகேளாத குறைபாட்டை காரணம் காட்டி பணி வழங்காமல் இருந்துள்ளது. அப்...

யுபிஎஸ்சி தேர்வில் முதல் 2 இடங்களை பிடித்த பொறியியல் பட்டதாரிகள்

Image
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. 761 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொறியியல் பட்டதாரிகளான சுபம் குமார் முதலிடம், ஜகர்த்தி அவஸ்தி இரண்டாமிடத்தையும் பிடித்துள்ளனர். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் ஆகிய தேர்வு முடிவுகளின்படி பொதுப்பிரிவில் 263 பேர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் 86 பேர், ஓபிசி 229 பேர் என மொத்தம் 761 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் முதல் 25 இடங்களில் இருப்பவர்களில் 13 பேர் ஆண்கள். 12 பேர் பெண்கள் ஆவர். பொறியியல் பட்டதாரிகளான சுபம் குமார் மற்றும் ஜகர்த்தி அவஸ்தி ஆகியோர் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளனர். மொத்தமுள்ள 236 இடங்களுக்கு நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வில் 2,053 பேர் நேர்முகத் தேர்விற்கு தேர்ச்சி பெற்றிருந்தனர். இதையும் படிங்க... குஜராத்: மூளைக் கட்டியால் பாதிக்கப்பட்ட சிறுமியின் ஆசையை நிறைவேற்றிய கலெக்டர் Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/116814/UPSC-declares-final-result-of...

2020-21 குறுவை சாகுபடி காப்பீட்டுத்தொகை ரூ20.29 கோடி வழங்கப்பட்டது: டி.ஆர்.பி ராஜா எம்எல்ஏ

Image
கடந்த ஆண்டு குறுவை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு 20.29 கோடி காப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டுள்ளது என மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய டி.ஆர்.பி ராஜா, “டெல்டா மாவட்டங்களில் கடந்த  2020 -  21 ஆம் ஆண்டு குறுவை சாகுபடி செய்யப்பட்டது. குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து இருந்தார்கள். ஆனால், பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படாமல் இருந்தது. இதற்காக விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். இந்நிலையில்   தற்போது 2020 -  21 ஆண்டு குறுவை சாகுபடிக்காக பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்திற்கு 17.3 கோடியும், நாகை மாவட்டத்திற்கு 2.99 கோடியும் பயிர் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியில் பயிர் காப்பீடு செய்த 36ஆயிரம் விவசாயிகளுக்கு 20.29 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2020 - 21 ஆம் ஆண்டு டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு வி...

பெண் தேர்வர்களுக்கான என்.டி.ஏ.&என்.ஏ. விண்ணப்ப படிவம் யு.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியீடு

Image
பெண் தேர்வாளர்களுக்கான தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி விண்ணப்ப படிவம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்னர், தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களையும் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் குஷ் கல்ரா என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், ‘தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களையும் சேர்க்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த ஆண்டு நடைபெறும் தேர்வில் பெண்களை அனுமதிப்பது சற்று சிரமமான காரியம். இது தொடர்பான புதிய விதிமுறைகளை உருவாக்க எங்களுக்கு சில காலம் தேவைப்படுகிறது. ஆகவே அடுத்த வருடம் மே மாதம் நடக்கவுள்ள தேர்வுக்கு பெண்களை விண்ணப்பிக்க அனுமதிக்கலாம்’ என கூறி, கால நீட்டிப்பு குறித்து கோரிக்கை வைத்திருந்தது. மத்திய அரசின் கோரிக்கை மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து, இவ்வருடத்துக்கான தேர்வு வரும் நவம்பரில் நடக்கவுள்ள நிலையில், அதிலேயே பெண் தேர்வர்களை அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. தொடர்புடைய செய்தி: ’இந்த வருடமே என்.டி.ஏ. தேர்வெழுத பெண்கள் அனுமதிக்கப...