படிக்க ஆசை இருந்தும் தாளாத குடும்ப பாரம்...பனங்கிழங்கு விற்று குடும்பத்தை காக்கும் சிறுவன்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தாய், தந்தையை இழந்த சிறுவன், குடும்பத்தை காப்பாற்ற பனங்கிழங்கு விற்கும் நிலையில் இருப்பது காண்போரை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருமுல்லைவாசல் சுனாமி நகரைச் சேர்ந்த இந்திராணிக்கு 60 வயதாகிறது. இவரது மருமகள் 7 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பரில் மகனும் உயிரிழந்தார். இத்தம்பதியின் மகன்களான 16 வயது முத்தரசனும், 14 வயது முத்துவேலும் பாட்டி இந்திராணியின் பாதுகாப்பில் உள்ளனர்.

தந்தை மறைவுக்குப் பின் குடும்ப பாரத்தை சுமக்க பனங்கிழங்கு விற்கும் முத்தரசன், பாட்டி உதவியுடன் சிறு கட்டுகளாக பனங்கிழங்குகளை கட்டி சீர்காழி, மயிலாடுதுறை மாதிரியான ஊர்களுக்கு எடுத்துச் சென்று விற்று வருகிறார். பனங்கிழங்கு விற்கும் வருமானம்தான் இக்குடும்பத்தின் பசியாற்றுகிறது.

நன்றாக படிக்கும் மாணவராக முத்தரசன், படிப்பை கைவிட மனமின்றி வரும் வாரத்தில் பள்ளியில் சேர உள்ளார். வறுமை என்னை பின்னுக்கு இழுத்தாலும் படிப்பு தன்னையும் குடும்பத்தையும் முன்னேற்றும் என்று கூறுகிறார் முத்தரசன்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/93562/16-year-old-Student-from-Mayiladuthurai-in-Tamil-Nadu-Struggling-to-earn-money-for-his-family-and-also-wishing-to-study-in-School.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா