Posts

Showing posts from July, 2021

“பள்ளிகளை மீண்டும் திறக்கவேண்டும்”: ஐஐடி பேராசிரியர்கள், மருத்துவர்கள்,பெற்றோர்கள் கடிதம்

Image
பள்ளிகளை மீண்டும் திறக்கக் கோரி மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடக மாநில முதல்வர்களுக்கு , பல ஐஐடி பேராசிரியர்கள் , மருத்துவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து கடிதம் எழுதியுள்ளனர். ஐஐடி பாம்பேவின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் பணிபுரியும் பேராசிரியர் பாஸ்கரன் ராமன் , மகாராஷ்டிரா , டெல்லி மற்றும் கர்நாடக முதல்வர்க ள், பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து ஒரு பணிக்குழுவை அமைக்குமாறு வலியுறுத்தினார் . இந்த கடிதத்தை ஐஐடி பா ம் பே , ஐஐடி டெல்லி பேராசிரியர்கள், பல்வேறு மருத்துவர்கள் , தொழில் நுட்ப வல்லுநர்கள் மற்றும் மகாராஷ்டிரா , டெல்லி மற்றும் கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த பெற்றோர்க ளும் இணைந்து எழுதியுள்ளனர். இ ந்த கடிதத்தில் , “ கடந்த 16 மாதங்களாக பள்ளிகள் பெருமளவில் மூடப்பட்டுள்ளன. இதனால் கற்றல் மற்றும் வளர்ச்சி இழப்புக ள் அதிகரித்து வருகின்றன , அதே நேரத்தில் அறிவியல் ஆதாரங்கள் மற்றும் பாதுகாப்புகளுடன் மீண்டும் பள்ளிகளை திறப்பத ற்கான சாத்தியம் குறித்த அறிக்கையை இந்த கடிதத்துடன் இணைத்துள்ளோம். கொரோனா ' ஜீரோ கேஸ் ' என்பது சாத்தியமில்லை , ஆனா...

+2 துணைத்தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு

Image
ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ள12ஆம் வகுப்பு துணைத் தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. அண்மையில் வெளியான பட்டியலின்படி தங்களுக்கு குறைவான மதிப்பெண் கிடைத்துள்ளதாக கருதி துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த 12ஆம் வகுப்பு மாணவர்களும், ஏற்கனவே மே மாதம் தேர்வெழுத விண்ணப்பித்திருந்த தனித்தேர்வர்களும் தங்களுக்கான நுழைவுச் சீட்டை இன்று முதல் பதவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி WWW.DGE.TN.GOV.IN என்ற இணையத்தளத்தில் நுழைவுச் சீட்டுகள் வெளியிடப்பட்டன. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/111424/-2-Subsidiary-exam-hall-ticket-issued.html

“விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாறவேண்டும்” - தோட்டக்கலைத் துறை அதிகாரிகள்

Image
இயற்கை விவசாயத்திற்கு அரசு பல்வேறு மானியங்களையும் உதவிகளையும் வழங்கி வருவதால், விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும் என   தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் வலியுறுத்தினர். தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் 6 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் மரவள்ளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஓராண்டு கால பயிரான மரவள்ளி தற்போது சாகுபடி செய்யப்பட்டு, ஆறு மாத காலம் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் மரவள்ளி கிழங்கு செடிகளை முழுவதும் செம்பேன் வெள்ளை பூஞ்சை போன்ற நோய்கள் தாக்கி வருகிறது. இதனால் செடிகள் வளராமல் அழுகும் நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் ஒரு செடியிலிருந்து மற்றொரு செடிக்கு இந்த வெள்ளை பூஞ்சை நோய் பரவி, சாகுபடி செய்துள்ள மொத்த பயிர்களையும் அழித்து வருகிறது. இதனால் மரவள்ளி சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் சூழல் இருந்து வருகிறது. இதனையடுத்து விவசாயிகள் தோட்டக்கலைத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தருமபுரி மாவட்ட தோட்டக்கலை துறை துணை இயக்குனர் ஜி.மாலினி மற்றும் அரூர் வட்டார உதவி இயக்குனர் எஸ்.ராஜேஸ் கண்ணன் உள்ளிட்டோர் அடங்கிய தோட்டக்கலைத் துறையினர், வ...

மாற்றுத்திறனாளி +2 தனித் தேர்வர்கள் தேர்வின்றி தேர்ச்சி - தமிழக அரசு அறிவிப்பு

Image
12-ஆம் வகுப்பு தேர்வு எழுத தனித் தேர்வர்களாக விண்ணப்பித்திருந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்துள்ளது.   தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கும் நடைமுறை குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்கள் சுய விருப்பத்தின் பேரில் தேர்வு எழுதலாம் என்றும் ஆனால் தேர்வு முடிவுகளே இறுதியானது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/111384/Government-has-announced-that-all-the-disabled-students-who-had-applied-as-separate-candidates-to-write-the-Class-12-sub-examination-have-passed.html

தமிழக பள்ளிகளில் பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

Image
சி.பி.எஸ்.இ போல் தமிழக பள்ளிகளிலும் பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் என  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.    'புதிய தலைமுறை'க்கு பிரத்யேகமாக பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பாடத்திட்டங்களை குறைக்காமல் பொதுத்தேர்வுகளை அறிவிக்க முடியாது என்று கூறினார். மேலும், எவ்வளவு சதவிகித பாடங்கள் குறைக்கப்படும் என்பது ஆலோசனைக்குப் பிறகு அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.   Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/111376/Minister-Anbil-Mahesh-Poyyamozhi-has-said-thatsyllabus-will-be-reduced-in-Tamil-Nadu-schools-like-CBSE.html

சிபிஎஸ்இ பிளஸ் டூ முடிவுகளில் மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி

Image
சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இதில் மாணவர்களை விட, மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  சிபிஎஸ்இ பிளஸ் டூ முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, மாணவர்களை விட மாணவிகள் 0.54 சதவிகிதம் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். 70 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் 95 சதவிகித மதிப்பெண்களை பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 99.37 சதவிகிதமாக உள்ள நிலையில், மாணவர்களை விட மாணவிகள் 0.54 சதவிகிதம் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 152 மாணவர்கள் 90 சதவிகிதத்துக்கும் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளனர். 65 ஆயிரம் மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை தயாரிக்கும் பணிகள் நடந்து வரும் நிலையில், ஆகஸ்ட் 5 ஆம்தேதி இந்த முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு பிளஸ்டூ தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், மாற்று தேர்ச்சி முறை மூலம் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.c...

“தனியார் பள்ளிகள் 85% கல்விக் கட்டணம் வசூலிக்கலாம்; ஆனால்” - உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

Image
தனியார் பள்ளிகள் 85 சதவீதம் வரை கட்டணம் வசூலித்துக் கொள்ள அனுமதித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம் கட்டணம் செலுத்தவில்லை அல்லது தாமதமாக செலுத்துகிறார்கள் என்ற காரணத்திற்காக மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு தடை விதித்து கடந்த ஆண்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், 75 சதவீத கட்டணத்தை, முறையே 40 மற்றும் 35 சதவீதம் என இரு தவணைகளாக வசூலித்துக்கொள்ள அனுமதியளித்து உத்தரவிட்டது. இந்த வழக்குகள், நீதிபதி கிருஷ்ணகுமார் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பள்ளிகள் 85 சதவீத கட்டணத்தை வசூலித்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், கட்டணம் செலுத்தாத மாணவர்கள் பள்ளிகளில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள் எனவும், தனியார் பள்ளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கட்டண சலுகை கோரும் மாணவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசு தரப்பில், கடந்த ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், நடப்பு 20...

சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 மதிப்பெண்கள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியீடு

Image
சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 மதிப்பெண்கள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படுகிறது.   கொரோனா பெருந்தொற்றால் சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 மதிப்பெண்கள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.   10, 11ம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களில் 30 சதவீதம், 12ம் வகுப்பில் நடந்த தேர்வில் 40 சதவீதம் கொண்டு மதிப்பெண் கணக்கீடு செய்யப்படுகிறது. மதிப்பெண்களில் திருப்தியில்லாத மாணவர்கள் பின்னர் நடக்கும் தேர்வில் பங்கேற்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 மதிப்பெண்களை மாணவர்கள் www.cbse.nic.in என்ற இணையதளம் மூலமோ அல்லது அந்தந்த பள்ளிகளிலோ அறிந்து கொள்ளலாம். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/111260/CBSE-Plus-2-marks-will-be-released-today-at-2-pm.html

ஆகஸ்ட் 2 முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் - பள்ளிக் கல்வித்துறை

Image
ஆகஸ்ட் 2 முதல் தினமும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருக்கிறது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக பள்ளிகள் இயங்கவில்லை. வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் முறையில் இணையவழியிலேயே நடைபெற்று வருகின்றன. தற்போது தமிழகத்தில் தொற்று குறைந்துள்ளதால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வந்து பணியாற்றுவது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, ஆகஸ்ட் 2 முதல் தினமும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என தற்போது அறிவித்திருக்கிறது. மாணவர் சேர்க்கைப் பணிகள் மற்றும் கல்வித் தொலைக்காட்சி பணிகளுக்காக ஆசிரியர்கள் அனைவரும் தினமும் பள்ளிக்கு வந்து பணியாற்றுமாறு பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருக்கிறது. மேலும், பள்ளிக் கால அட்டவணை தயாரித்தல், பள்ளி வளாகங்களை தூய்மைப்படுத்தல் போன்ற பணிகளுக்காகவும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறது. இதற்கிடையே கிராமப்புறங்களில் தொடக்கப்பள்ளிகளை திறப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இது...

கொள்முதல் நிலையத்தை இழுத்து மூடிய அதிகாரிகள் - நெல் மூட்டைகளுடன் காத்திக்கும் விவசாயிகள்!

Image
கும்பகோணம் அருகே பாபநாசம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திடீரென மூடப்பட்டதால் 6 நாட்களாக கொள்முதல் நிலையம் முன்பு அறுவடை செய்த நெல்களை குவித்து வைத்து விவசாயிகள் காத்திருக்கிறார்கள். பாபநாசம் நெல் கொள்முதல் நிலையத்திற்கு, கோபுராஜபுரம், பாபநாசம், திருப்பாலத்துறை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள், தாங்கள் அறுவடை செய்த குறுவை நெல்மணிகளை விற்பனைக்காக கொண்டுவந்து குவித்து வைத்து கடந்த 6 நாட்களாக காத்து கிடக்கின்றனர். இதனிடையே நெல்லை கொள்முதல் செய்யக்கோரி பாபநாசம் கொள்முதல் நிலைய அலுவலரிடம் விவசாயிகள் கேட்டபோது, பாபநாசம் பகுதியில் அறுவடை பணிகள் முடிந்து விட்டதாகவும் தற்போது வெளியூர் வியாபாரிகள் நெல்லை கொண்டு வருவதால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளிடம் புகார் அளித்து கொள்முதல் நிலையத்தை மூடிவிட்டதாக தெரிவித்ததாக புகார் தெரிவிக்கின்றனர்.  பாபநாசம் பகுதியில் அறுவடை பணிகள் முடியவில்லை எனவும், தற்போது வரை 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தேங்கியுள்ளதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், தேங்கியிருக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய தம...

புதிய கல்விக்கொள்கையே மாணவர்களின் வழிகாட்டி - பிரதமர் மோடி உரை

Image
புதிய கல்விக்கொள்கையே மாணவர்களின் வழிகாட்டி என கல்வியாளர்கள் மத்தியில் ஆற்றிய உரையில்  பிரதமர் மோடி  பேசியிருக்கிறார்.  தேசிய கல்விக்கொள்கை கொண்டுவரப்பட்டு ஓராண்டு நிறைவடையும் நிலையில் கல்வியாளர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ’’தேசிய கல்விக்கொள்கை கொண்டுவரப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இந்த புதிய கல்விக்கொள்கை மூலம் நிறைய மாற்றங்கள் கொண்டு வந்துள்ளோம். எந்த இடத்துக்கு போனாலும் இக்கால இளைஞர்கள் உச்சத்தை தொடும் வகையில் புதிய கல்விக்கொள்கை அமைந்துள்ளது. புதிய கல்விக் கொள்கையில் படிப்பவர்கள் எதிர்காலத்தை மிகத் தெளிவாக தீர்மானித்துக் கொள்வார்கள்’’ என்று பேசியுள்ளார்.  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/111195/PM-Modi-said--New-education-policy-is-the-future-of-students.html

தோட்டத் தொழிலாளர் டூ பள்ளி ஆசிரியர்... உத்வேகமூட்டும் செல்வமாரியின் பயணம்!

Image
தோட்டத் தொழிலாளராக இருந்து பல கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டு தற்போது அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியராக தேர்வாகி பலருக்கும் நம்பிக்கையாக மாறியிருக்கிறார் இளம்பெண் செல்வமாரி. ஐ.ஏ.எஸ் கனவை நோக்கிய அவரது பயணம், நம் ஒவ்வொருவருக்குமே உத்வேகமூட்டக் கூடியது. தமிழ்நாடு - கேரளா எல்லையான குமுளி அருகே உள்ள பட்டியலின மக்கள் வசிக்கும் கிராமத்தைச் சேர்ந்தவர் 28 வயதான எஸ்.செல்வமாரி. ஏரளமான கனவுகளை சுமந்துகொண்டு தனது வாழ்க்கையை ஒவ்வொரு படியாக மாற்றி வரும் செல்வமாரி, நமக்கு எல்லாம் ஒரு ரியல் இன்ஸ்பிரேஷன் எனலாம். குமுளியின் பிரதான தொழிலான ஏலக்காய் தோட்டப் பணியே செல்வமாரிக்கும் அவரின் குடும்பத்துக்கும் உணவளித்தது. செல்வமாரியோடு சேர்த்து அவரின் வீட்டில் மூன்று பிள்ளைகள். அவரின் தந்தை சிறுவயதிலேயே கைவிட்டு சென்றதால் தாய் செல்வம் மற்றும் பாட்டி பேச்சியம்மாள் அரவணைப்பில் மூவரும் வாழ்ந்து வந்தனர். தந்தையால் கைவிடப்பட்ட குடும்பம் எந்த அளவுக்கு கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளுமோ, அதே நிலையை செல்வமாரியின் குடும்பம் எதிர்கொள்ள நேர்ந்தது. தொடர்ந்து வாட்டிய வறுமையால் படிப்பில் சுட்டியாக இருந்த செல்வமாரிக்கு உறவினர...

அகில இந்திய மருத்துவ ஒதுக்கீடு - ஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு

Image
அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு நடப்பு ஆண்டிலேயே இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. அந்த வழக்கு விசாரணையில் எப்போது இடஒதுக்கீடு செய்யப்படும் என நீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியது. அதற்கு, திங்கட்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இதுகுறித்த ஆலோசனை நடைபெற்றதாகவும், அந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவை மத்திய அரசு தற்போது அறிவிப்பாக வெளியிடுவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது. அதன்படி, மாநில அரசு நடத்திவரும் மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுப் பிரிவில் ஓபிசிக்கு 27 சதவீதமும், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10 சதவீதமும் இடஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. எம்பிபிஎஸ், எம்.டி, எம்.எஸ், பிடிஎஸ், எம்.டி.எஸ், டிப்ளோமோ ஆகிய படிப்புகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tami...

திருவாரூர்: நீட் தேர்வுக்கு தயாராகும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் செலுத்திய ஆட்சியர்

Image
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், தன் விருப்ப நிதியிலிந்து ரூ.75,000 தொகையை, ஏழை, எளிய அரசு பள்ளி மாணவர்களின் நீட் தேர்விற்கான விண்ணப்ப கட்டணத்தை செலுத்துவதற்கும், மாணவர்களுக்கான உதவித்தொகையாகவும் வழங்கி உதவியுள்ளார். தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர்கள், கல்வியாளர்கள், அரசியல் கட்சியினர் என பலரும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்திருப்பதால், இப்போதைக்கு மாணவர்கள் அனைவரும் நீட் தேர்வுக்கு தயாராக தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியிருந்தது. ஆகவே அவர்களும் தயாராகி வருகின்றனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு மிகவும் சவாலாக இருப்பதாக கூறப்பட்ட காரணத்தினால், அரசு சார்பில் அவர்கள் அனைவரும் தேர்வுக்கு தயாராக இலவச பயிற்சி வகுப்புகள் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அப்படி திருவாரூரில் அரசு சார்பில் நீட் தேர்வுக்கு இலவசமாக தயாராகிவரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, அம்மாவட்ட ஆட்சியர் தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணத்தை தன்னுடைய விருப்ப நிதியிலிருந்து வழங்க...

அதிகாரிகளின் மெத்தனத்தால் தேங்கும் நெல் மூட்டைகள் - விவசாயிகள் கவலை

Image
தஞ்சை மாவட்டத்தில் 450 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 190 நிலையங்கள் மட்டுமே திறக்கப்பட்டிருப்பதாகவும் இதனால் நெல் மூட்டைகள் தேங்குவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கோடை நெல் சாகுபடியையே விவசாயிகள் நம்பியிருந்தனர். தஞ்சையில் மட்டும் 47ஆயிரம் ஏக்கரில் கோடை நெல் சாகுபடி நடைபெற்றது. அறுவடை பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், கொள்முதல் நிலையங்கள் திறக்கபடாததால் நெல் மூட்டைகள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், 450 நெல் கொள்முதல் நிலையங்களில் 190 மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. அதிகாரிகளின் மெத்தனமே இதற்கு காரணம் என்றும் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM source http://puthiyathalaimurai.com/newsview/111030/farmers-alleged-government-officials-over-Paddy-Procurement-Station-closed.html

தஞ்சையில் நடவு நட்ட பயிர்கள் தண்ணீரின்றி கருகுவதால் விவசாயிகள் வேதனை

Image
தஞ்சை மாவட்டத்தில் உள்ள குடமுருட்டி ஆற்றுப் பாசன வாய்க்காலில் தண்ணீர் வராததால் பயிர்கள் காய்ந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தஞ்சை அருகே உள்ள கண்டியூர், திருவாலம்பொழில், திருப்பந்துருத்தி உள்ளிட்ட பகுதிகளுக்கு குடமுருட்டி ஆற்றுப் பாசன வாய்க்காலில் இருந்து தண்ணீர் வராததால்  நாற்று விட்டு காயும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.  நடவு நட்ட பயிர் தண்ணீரின்றி கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், குடமுருட்டி ஆறு பாசன வாய்க்காலிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM source http://puthiyathalaimurai.com/newsview/111028/farmers-getting-affected-due-to-enough-water-for-agriculture.html

ஆகஸ்ட் 18 முதல் பி.இ.வகுப்புகள் தொடக்கம் - அண்ணா பல்கலைக்கழகம்

Image
ஆகஸ்ட் 18-ஆம் தேதி முதல் பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைனில் வகுப்புகளை தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் இருப்பதால், நடப்பு செமஸ்டருக்கான பொறியியல் வகுப்புகளும் ஆன்லைன் மூலமாகவே நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு மாணவர்களைத் தவிர்த்து, மற்ற மாணவர்களுக்கு நடப்பு செமஸ்டருக்கான வகுப்புகளை ஆகஸ்ட் 18-ஆம் தேதி முதல் நவம்பர் 30-ஆம் தேதி வரை, நடத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து செய்முறை தேர்வு டிசம்பர் 2-ஆம் தேதியும், செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் 13-ஆம் தேதியும் தொடங்கப்பட இருக்கிறது. இந்தத் தேர்வுகள் முடிவடைந்ததும், அடுத்த செமஸ்டருக்கான வகுப்புகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் தேதி தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு வெளியிட்டிருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த வகுப்புகள் நடைபெற வேண்டும் என அண்ணா பல்கலைக் கழகம் குறிப்பிட்டுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.co...

டிஜிட்டல் கல்வியில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை எப்படி? - ஒரு பார்வை

Image
கொரோனா பேரிடர் காலத்தில் பள்ளிக் கல்வித்துறையில் டிஜிட்டலின் பங்களிப்பு அத்தியாவசியமாகிவிட்ட சூழலில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் டிஜிட்டல் செயல்பாடுகள், தேசிய அளவில் முன்னோக்கி இருப்பது மத்திய அரசின் புதிய தரவுகளின் மூலம் தெரிய வருகிறது. டிஜிட்டல் வழிக் கல்வியில் தமது முன்னெடுப்புகள் குறித்து விளக்கம் அளிக்கும் மத்திய அரசு, "இந்தியாவில் அனைவருக்கும் சமமான கல்வி கிடைப்பதற்கு மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 (RTE)-ன் படி, 6 முதல் 14 வயதுக் குழந்தைகளுக்கு அருகில் உள்ள பள்ளியில் இலவச மற்றும் கட்டாய கல்வியை, சம்பந்தப்பட்ட அரசுகள் வழங்குவதை உறுதி செய்கிறது. கோவிட் பெருந்தொற்று காலத்திலும், குழந்தைகளுக்கு கல்வி கிடைப்பதற்காக, மத்திய கல்வி அமைச்சகம் மூலம் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டன. குறிப்பாக, டிஜிட்டல் முறையில் ஆன்லைன் கல்வி, டி.வி மற்றும் ரேடியோ மூலம் குழந்தைகளுக்கு கல்வி கிடைப்பதற்காக பிரதமரின் இ-வித்யா நடவடிக்கை தொடங்கப்பட்டது. இதுமட்டுமின்றி, திக்‌ஷா (ஆன்லைன்), ஸ்வயம் (ஆன்லைன்), ஸ்வயம் பிரபா (டி.வி), தூர்தர்ஷ...

தருமபுரி: வரத்து குறைவு; விலை அதிகம் - பருத்தி விவசாயிகள் மகிழ்ச்சி

Image
அரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், 1950 மூட்டை பருத்தி ரூ.55 லட்சத்திற்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தருமபுரி மாவட்டம் அரூர் கூட்டுறவு வேளாண்மை விற்பனைக் கடன் சங்கத்தில் வாரந்தோறும், திங்கட் கிழமைகளில் பருத்தியும், வியாழக்கிழமை கொப்பரை தேங்காயும், வெள்ளிக் கிழமைகளில் மஞ்சளும் ஏலம் விடப்பட்டு வருகிறது. இங்கு, விவசாயிகள் தங்களது விளைநிலத்தில் பயிரிடப்படும் பருத்தி, மஞ்சள் மற்றும் கொப்பரை தேங்காய்களை எடுத்து வந்து விற்பனை செய்து பணத்தை பெற்றுச் செல்கின்றனர். இதில் அரூர், கடத்தூர், பொம்மிடி, கம்பைநல்லூர், கோட்டப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த 302 விவசாயிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். இவர்கள் கொண்டுவந்த 1950 பருத்தி மூட்டை ரூ55 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. இதில், ஆர்சிஎச் ரக பருத்தி குவிண்டால், வர லட்சுமி (டிசிஎச்) ரகம் ரூ.6800 முதல் ரூ.7769 வரையில் ஏலம் போனது. கடந்த வாரத்தைவிட பருத்தி வாரத்து குறைந்திருந்தாலும் கூடுதல் விலைக்கு விற்பனையானது. கடந்த வாரம் 2450 மூட்டை பருத்தி ரூ.62 லட்சத்திற்கு விற்பனையான நிலையில், நேற்று 19...