நாமக்கல்: ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பதால் நேரமும் செலவும் குறைவதாக விவசாயிகள் கருத்து

நாமக்கல் அருகே ட்ரோனை பயன்படுத்தி மரவள்ளி பயிருக்கு மருந்து தெளிக்கும் விவசாயிகள், நவீன தொழில்நுட்பம் நேரத்தையும், மருந்து செலவையும் குறைப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் மோகனூர், வளையப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மரவள்ளி, பருத்தி, வாழை உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக மோகனூர், ஒருவந்தூர், சங்கரம்பாளையம் செல்லியம்பாளையம், வடுகப்பட்டி, உன்னியூர், கிடாரம், ஒருவந்தூர் புதூர், கொங்கு நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மரவள்ளி பயிரிடப்பட்டுள்ளன.

image

இந்நிலையில், ஆண்டு தோறும் மரவள்ளி, பருத்தி, வாழை பயிரிடும் போது பூச்சிகள் அதிகம் தாக்கி வந்த நிலையில், பூச்சிகளை கட்டுப்படுத்த விவசாயிகள் தொடர்ந்து பூச்சி கொல்லி மருந்துகளை தெளித்து வந்தனர். இந்நிலையில் இப்பகுதியில் விவசாயிகள் நவீன ட்ரோன் பயன்படுத்தி மருந்து தெளிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

image

ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பதால் நேரம் பாதி அளவாக குறைவதோடு மருந்து செலவும் வெகுவாக குறைவதாகவும் அதாவது ஒரு ஏக்கருக்கு தெளிக்கும் மருந்தை 2 ஏக்கருக்கு தெளிப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/100581/Namakkal-Drone-spraying-reduces-time-and-cost-Farmers.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா