தஞ்சை: கனமழையால் 5 ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் முற்றிலும் சேதம்

தஞ்சை மாவட்டத்தில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால், 5 ஆயிரத்திற்கும் அதிகமான வாழைமரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன.
தஞ்சை மாவட்டம் குலமங்கலம் பகுதியில் நேற்றிரவு சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் அப்பகுதியில் பயிரிடப்பட்ட வாழைமரங்கள் முற்றிலும் சேதமாகின. ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறும் விவசாயிகள், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/103266/Tanjore-Banana-trees-planted-on-5-acres-were-completely-damaged-due-to-heavy-rains.html
Comments
Post a Comment