புதிய கல்வி கொள்கையை தமிழகத்தில் நுழைய விடமாட்டோம்: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்வி கொள்கையை தமிழகத்தில் நுழைய விடமாட்டோம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னையில் முதல்வர் முக ஸ்டாலின் உடன் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் முறையாக நடைபெறவில்லை. அண்ணா பல்கலையில், நவம்பர், டிசம்பரில் நடைபெற்ற தேர்வில் 25 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 

சுமார் 4.25 லட்சம் பேர் எழுதிய தேர்வில் 1.10 லட்சம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களுக்கு மீண்டும் மறு தேர்வு நடத்தப்படும். 2021 பிப்ரவரியில் நடந்த தேர்வில் பல்வேறு முறைகேடு நடந்தது தொடர்ந்து மறுதேர்வு நடத்தப்படுகிறது. மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் நுழைய விடமாட்டோம்." என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/102115/Ponmudi-said-We-will-not-allow-the-new-education-policy-to-enter-Tamil-Nadu.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா