விவசாயிகள் தங்களது விளைபொருட்களை சந்தைப்படுத்த உதவி எண்கள் அறிவிப்பு!

விவசாயிகள் தங்களது விளைபொருட்களை சந்தைப்படுத்தவும், பிற மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லவும் உதவி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள் போன்றவை வாகனங்கள் மூலம் தங்கு தடையின்றி கிடைக்க அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் தாங்கள் விளைவித்துள்ள காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை சந்தைப்படுத்தவும், பிற மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லவும் அந்தந்த மாவட்டத்தில் அமைந்துள்ள வேளாண் விற்பனைத்துறை, தோட்டக்கலைத்துறை இயக்குநர்களை தொடர்பு கொள்ள தமிழக அரசு வழிவகை செய்துள்ளது.

அதன்படி, சென்னை, மதுரை, கோவை, தஞ்சை, திருச்சி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 37 மாவட்டங்களுக்கும் உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 044-222 53 884 என்ற எண்ணில் வேளாண் விற்பனைத்துறையும், 1800 425 4444 என்ற எண்ணில் தோட்டக்கலைத்துறையும், 044-285 94 338 என்ற எண்ணில் வேளாண்மைத்துறையையும் தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/103741/The-Government-of-Tamil-Nadu-has-announced-helpline-numbers-for-farmers-to-market-their-produce-amid-of-COVID19-Lockdown.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா