முழு ஊரடங்கு காலத்திலும் திறக்கப்பட்ட பூச்சி மருந்து கடைகள்: விவசாயிகள் மகிழ்ச்சி

முழு ஊரடங்கு காலத்திலும் உரம் மற்றும் பயிர்களுக்கான பூச்சி மருந்துக் கடைகள் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
முழு ஊரடங்கால் கடந்த சில தினங்களாக உரக் கடைகள் மூடப்பட்டிருந்தது. இதனால் குறுவை சாகுபடி செய்யத் தொடங்கிய விவசாயிகளுக்கு உரம் மற்றும் பூச்சி மருந்து கிடைக்காததால் அவதியடைந்தனர். இதையடுத்து கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி காலை ஆறு மணி முதல், பத்து மணி வரை உரம் மற்றும் பூச்சி மருந்துகளை விற்பனை செய்ய அரசு அனுமதித்துள்ளது.
அதனடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் 317 உரக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/104237/Fertilizers-shop-opened-in-Tamil-Nadu-at-lockdown-days.html
Comments
Post a Comment