புதுச்சேரியிலும் +2 பொதுத்தேர்வு ரத்து - முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

கொரோனா பரவலின் மத்தியில் மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு மத்திய அரசு சிபிஎஸ்இ +2 தேர்வை ரத்து செய்ததையடுத்து குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்கள் +2 பொதுத்தேர்வை ரத்துசெய்தன. அதனைத் தொடர்ந்து பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு தமிழக அரசும் +2 பொதுத்தேர்வை ரத்து செய்தது. மேலும் மாணவர்களுக்கு எதன் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்பது குறித்து குழு அமைத்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். தமிழக பாடத்திட்டத்தையே பின்பற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் +2 பொதுத்தேர்வு நடைபெறாது என்ற அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். மேலும் தமிழகத்தில் மதிப்பெண் வழங்கப்படும் அடிப்படையிலேயே புதுச்சேரியிலும் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/105521/Puducherry-cancelled--2-board-exam-after-Tamilnadu.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா