“+2 தேர்வு முடிவில் முதலமைச்சருக்கு நூற்றுக்கு நூறு” - முதல்வருக்கு வைரமுத்து பாராட்டு

+2 தேர்வை ரத்துசெய்த முதல்வருக்கு கவிஞர் வைரமுத்து பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டதாவது, “

+2 பொதுத் தேர்வு என்றஉளவியல் போரிலிருந்து
மாணவ சமுதாயத்தை விடுவித்த
தமிழக அரசைப் பாராட்டுகிறேன்.

உயர்கல்வியா உயிரா
என்ற வினாவை முன்வைத்து
உயிரே என்று முடிவெடுத்ததில்
மாணவர்களின் பதற்றம் தணிந்தது.

+2 தேர்வு முடிவில்
முதலமைச்சருக்கு
நூற்றுக்கு நூறு” இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கொரோனா 2 அலை காரணமாக மத்திய அரசு +2 சிபிஎஸ்இ தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. அதனைத்தொடர்ந்து குஜராத், கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்களில் +2 தேர்வு ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் தமிழகத்தில் +2 தேர்வை நடத்துவது தொடர்பாக கருத்துக்கள் கேட்கப்பட்டன. இதற்கு கல்வியாளர்கள், பொதுமக்கள் என பலரும் தேர்வு நடத்துவதற்கு ஆதரவாகவும், மறுத்தும் கருத்துகளை தெரிவித்தனர்.. இந்த நிலையில் நேற்று தமிழக அரசு +2 தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/105424/One-hundred-per-cent-for-the-Chief-Minister-at-the-decision-of-the--2-examination-Vairamuthu-praise-for-the-Chief-Minister.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா