தமிழரின் தரம் உயர்த்த! தலை நிமிர்ந்த!! தலைமுறைகள்!!!
கொரோனா covid 19 ஊரடங்கு காலத்தில் செய்யப்பட்ட உதவிகள்
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
நமது கைகளை உயர்த்தவும் அமைப்பின் சார்பாக வடசென்னை மாவட்ட தலைவர் திரு ரவி அவர்களின் தலைமையில் இன்று காலை சர்மா நகர் மார்க்கெட் அருகில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
இந்த சேவையில் மாநில பொருளாளர் திரு நந்தகுமார் அவர்களும் மாநில முதன்மை பொதுச் செயலாளர் திரு மோகன் அவர்களும் கலந்து கொண்டனர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்
இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது
அனைவருக்கும் வணக்கம் இன்று போதைப்பொருள் பயன்படுத்துதல் மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் #Antidrugsday இந்த தினத்தில் நமது கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பாக நமது சென்னையில் மிக மோசமாக வளர்ந்து நிற்கும் அசுரனாக நாம் பார்ப்பது இந்த போதை பழக்கம் இந்த மாபெரும் அசுரனை அழிக்க நமது கைகளை உயர்த்துவோம் அமைப்பு இந்த நாளில் DRUGS FREE CHENNAI #DRUGS_FREE_CHENNAI என்ற இயக்கத்தை தொடங்கி அடுத்த மூன்று மாதத்தில் இதற்கான வேலையை முழுமூச்சில் செய்ய திட்டமிட்டு உள்ளோம் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் இந்த முயற்சியில் அனைவரும் ஒன்று திரண்டு பணியாற்ற வாரீர் வாரீர் வாரீர் என்று அன்போடு அழைக்கிறேன் J.லோகேஷ் குமார் நிறுவனர் & தலைவர் கைகளை உயர்த்துவோம் அமைப்பு
கைகளை உயர்த்துவோம் அமைப்பு மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால்பந்தாட்ட பயிற்சி பள்ளி சார்பில் இன்று 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கே எம் கார்டன் விளையாட்டு மைதானத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்து அகாடமியில் பயிலும் மாணவர்களுக்கு கால்பந்தாட்ட போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசு வழங்கப்பட்டது
Comments
Post a Comment