தமிழகத்தில் இன்று முதல் நூலகங்கள் திறப்பு

தமிழகத்தில் இன்று முதல் நூலகங்கள் திறக்க பொது இயக்குநகரகம் அனுமதி வழங்கியுள்ளது. ஏராளமானோர் வைத்த கோரிக்கைகளை ஏற்று 75 நாட்களுக்கு பிறகு நூலகங்கள் திறக்கப்படுகின்றன.
நூல்களை நேரடியாக வாசகர்கள் எடுக்க அனுமதி இல்லை. பணியாளர்களே எடுத்து கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 65 வயதிற்கு மேற்பட்டோர், கர்ப்பிணிகள், 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இல்லை. போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுவோர்களை கருத்தில் கொண்டு நூலகங்கள் திறக்கப்படுகின்றன. வாசகர்கள், பணியாளர்கள் கிருமிநாசினி பயன்படுத்துவதோடு முகக்கவசம் அணிவது கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/110554/libraries-open-in-Tamil-Nadu-today.html
Comments
Post a Comment