புதிய கல்விக்கொள்கையே மாணவர்களின் வழிகாட்டி - பிரதமர் மோடி உரை

புதிய கல்விக்கொள்கையே மாணவர்களின் வழிகாட்டி என கல்வியாளர்கள் மத்தியில் ஆற்றிய உரையில் பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.
தேசிய கல்விக்கொள்கை கொண்டுவரப்பட்டு ஓராண்டு நிறைவடையும் நிலையில் கல்வியாளர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ’’தேசிய கல்விக்கொள்கை கொண்டுவரப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இந்த புதிய கல்விக்கொள்கை மூலம் நிறைய மாற்றங்கள் கொண்டு வந்துள்ளோம். எந்த இடத்துக்கு போனாலும் இக்கால இளைஞர்கள் உச்சத்தை தொடும் வகையில் புதிய கல்விக்கொள்கை அமைந்துள்ளது. புதிய கல்விக் கொள்கையில் படிப்பவர்கள் எதிர்காலத்தை மிகத் தெளிவாக தீர்மானித்துக் கொள்வார்கள்’’ என்று பேசியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/111195/PM-Modi-said--New-education-policy-is-the-future-of-students.html
Comments
Post a Comment