நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள் குறுக்கீட்டை தடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள் குறுக்கீட்டை தடுத்து நெல் கொள்முதலை தீவிரப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள், ஆளும் கட்சியினர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி தாங்கள் டோக்கன் கொடுக்கும் விவசாயிகளிடம் மட்டும்தான் நெல் கொள்முதல் செய்யவேண்டும் என அதிகாரிகளை மிரட்டுவதாக செய்திகள் வெளியாகி வருவதாக கூறியுள்ளார். பல விவசாயிகள் 20 நாட்கள் காத்திருந்தும் ஆளும் கட்சியினரின் கருணைப் பார்வை இல்லாததால் நெல்லை விறபனை செய்யமுடியாமல் துன்பத்தை அனுபவித்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இடைத்தரகர்களை முதலமைச்சர் உடனடியாக கட்டுப்படுத்தி, அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் நெல் கொள்முதலை விரைவுபடுத்தவேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/108962/Control-intermediaries-in-Paddy-Procurement-Stations-says-Tamil-Nadu-Legislative-Assembly-Leader-of-Opponent-Edappadi-K-Palaniswami.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா