தஞ்சையில் நடவு நட்ட பயிர்கள் தண்ணீரின்றி கருகுவதால் விவசாயிகள் வேதனை

தஞ்சை மாவட்டத்தில் உள்ள குடமுருட்டி ஆற்றுப் பாசன வாய்க்காலில் தண்ணீர் வராததால் பயிர்கள் காய்ந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தஞ்சை அருகே உள்ள கண்டியூர், திருவாலம்பொழில், திருப்பந்துருத்தி உள்ளிட்ட பகுதிகளுக்கு குடமுருட்டி ஆற்றுப் பாசன வாய்க்காலில் இருந்து தண்ணீர் வராததால் நாற்று விட்டு காயும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். நடவு நட்ட பயிர் தண்ணீரின்றி கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், குடமுருட்டி ஆறு பாசன வாய்க்காலிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/111028/farmers-getting-affected-due-to-enough-water-for-agriculture.html
Comments
Post a Comment