விழுப்புரம்: மீண்டும் உழவர் சந்தை திறப்பு - செஞ்சி விவசாயிகள் மகிழ்ச்சி

செஞ்சியில் புதுப்பிக்கப்பட்ட உழவர் சந்தையை சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் திற்ந்து வைத்தார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் ரூபாய் 14 லட்சம் மதிப்பீட்டில் 24 கடைகள் கொண்ட புதுப்பிக்கப்பட்ட உழவர் சந்தையை சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் திறந்து வைத்தார்.

image

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமை தாங்கினார். சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் புதுப்பிக்கப்பட்ட உழவர் சந்தை திறந்து வைத்து பார்வையிட்டார் பின்னர், காய்கறிகள் கொள்முதல் செய்தார். பின் வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில் 40 விவசாயிகளுக்கு 7 லட்சம் மதிப்பிலான விவசாய இடுபொருள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வேளாண்துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/113486/Villupuram-Farmers-market-re-opened-Chengi-farmers-happy.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா