தமிழ் எழுத்தாளர்களின் படைப்பு நீக்கம் ஏன்? - டெல்லி பல்கலைக்கழகம் விளக்கம்

மொழி பாடப்பிரிவில் இடம்பெறக்கூடிய பாடத்திட்டம் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது என டெல்லி பல்கலைக்கழக நிர்வாகம் கூறியிருக்கிறது.

பாடத்திட்டத்திலிருந்து தமிழ் எழுத்தாளர்களின் படைப்பு நீக்கம் குறித்து டெல்லி பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கம் அளித்திருக்கிறது, அதில், தனி மனிதர், ஒரு சமூக அமைப்பின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் பாடத்திட்டம் இருக்கக் கூடாது எனவும், பாடத்திட்டம் ஒருதலைப்பட்சமாகவும் இருக்கக் கூடாது எனவும் டெல்லி பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கமளித்திருக்கிறது.

image

மேலும் பாடப்பிரிவுகளை நீக்கியதில் உள்நோக்கம் ஏதும் இல்லை எனவும், படைப்பாளிகளின் சாதி, மதம், மொழி பின்புலத்தை வைத்து டெல்லி பல்கலைக்கழகம் செயல்படுவதில்லை எனவும் விளக்கமளித்திருக்கிறது.

image

முன்னதாக, டெல்லி பல்கலைக் கழகத்தில் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கம் செய்யப்பட்டதற்கு தமிழகத்தில் இருந்து பல்வேறு தரப்பினரும் கண்டன குரல்களை கொடுத்து வந்தனர். அந்த வரிசையில் திமுக எம்பியும் எழுத்தாளருமான தமிழ்ச்சி தங்க பாண்டியனும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய எதிர்ப்பினை பதிவு செய்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/113956/Delhi-University-explained-why-they-removed-Tamil-authors-writing.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா