1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு எப்போது பள்ளி திறப்பு? வரும் 30ம் தேதி முடிவு - அன்பில் மகேஷ்

தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி திறப்பு பற்றி வரும் 30ம் தேதி முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
 
தமிழ்நாட்டில் 6 முதல் 8 ஆம் வகுப்புகள் வரை பள்ளிகளை திறப்பது தொடர்பான அறிக்கை முதலமைச்சரிடம் இன்று அளிக்கப்படவுள்ள நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், ''தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி திறப்பு பற்றி, ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக வரும் 30 ஆம் தேதி நடக்கும் ஆலோசனையில் முடிவெடுக்கப்படும். மருத்துவ நிபுணர்கள் அளிக்கும் ஆலோசனை அடிப்படையில் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்.
 
பள்ளிகளை திறப்பது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வேறுபட்ட கருத்து தெரிவிக்கின்றனர். சிலர் 1 முதல் 5 ஆம் வகுப்புகளை தொடங்கலாம் என்றும் சிலர் 1 முதல் 8ஆம் வகுப்புகளை தொடங்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். 6 முதல் 8 ஆம் வகுப்புகள் வரை பள்ளிகளை திறப்பது தொடர்பான அறிக்கை இன்று முதலமைச்சர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்'' என்று கூறினார்.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/115837/Anbil-Mahesh-Poyyamozhithat-a-decision-will-be-taken-on-the-30th-regarding-the-opening-of-schools-for-students-from-1st-to-8th-class-in-Tamil-Nadu.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா