விவசாயிகளுடன் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது குறைகளை பிரதமர் நரேந்திர மோடி கேட்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் விவசாயிகள் அமைப்பு சார்பில் முழு அடைப்பு போராட்டடம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் மத்திய அரசை கண்டித்து ரயில், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றன.
இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளை அழைத்து அவர்களது குறைகளை பிரதமர் நரேந்திர மோடி கேட்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து, பேசிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்காத காரணத்தினால் தான் நாடு தழுவிய அளவில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர் எனத் தெரிவித்துள்ளார்.
இதனைப்படிக்க...பாரதிய ஜனதா ஒரு பகட்டுச் சொல்லாட்சி கொண்ட கட்சி : மம்தா பானர்ஜி
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/117128/Prime-Minister-should-hold-talks-with-farmers--Congress-insists.html
Comments
Post a Comment