நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்தார் முதல்வர்.ஸ்டாலின்

நீட் நுழைவுத்தேர்வுக்கு நிரந்தர விலக்குக்கோரும் மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் முதல்வர் மு.க.ஸடாலின்.

இது தொடர்பாக  சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “ நீட் நுழைவுத்தேர்வுக்கு நிரந்தர விலக்குக்கோரும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றி  குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசுப்பள்ளியில் படித்த மாணவர்கள் 7.5% இடஒதுக்கீடு பெறும் வகையில் சட்டமசோதா இருக்கும். நீட் தேர்வினை திமுக தொடக்கம் முதலே எதிர்த்து வருகிறோம். திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டத்தை தொடங்கியுள்ளோம். அனைத்து கட்சிகளும் இதற்கு ஆதரவு தரவேண்டும். மருத்துவ படிப்பிற்கு 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்வதற்கான முயற்சியை எடுத்து வருகிறோம்.

சிஏஏ சட்டம் வந்தபோதே நீட் தேர்வுக்கு விலக்கு கொடுத்தால் அந்த சட்டத்தை ஆதரிக்கிறோம் என  அதிமுக கூறியிருக்கலாம். ஆனால் அதை செய்ய அதிமுகவுக்கு சக்தி இல்லை” எனத் தெரிவித்தார்

இதனைப்படிக்க: மாணவர் தற்கொலைக்கு அரசே காரணம்; நீட் விலக்கு கோரும் மசோதாவை ஆதரிப்போம் - எடப்பாடி பழனிசாமி 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/115629/The-bill-to-exempt-the-NEET-exam-was-tabled-in-the-Assembly.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா