நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு

செப்டம்பர் 12ஆம் தேதி நடந்த நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
ஏற்கெனவே நடந்த நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு புதிதாக தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என மாணவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் வினாத்தாளை பயிற்சி மையங்களில் முன்கூட்டியே வழங்கி முறைகேடு நடந்துள்ளதாகவும், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்துள்ளதாகவும் மாணவர்கள் புகார் அளித்துள்ளனர்.
மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் நீட் மருத்துவ நுழைவுத்தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/117253/Case-in-the-Supreme-Court-seeking-cancellation-of-NEET-exam.html
Comments
Post a Comment