கடலூர்: கால்நடைகளுக்கு தீவனமாகும் வெண்டைக்காய் செடி - விலை வீழ்ச்சியால் நேர்ந்த அவலம்

வெண்டைக்காய் விலை வீழ்ச்சியால் விளை நிலத்திலேயே வெண்டை செடிகளை கால்நடை தீவனமாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடி, பெரியவடவாடி, வடகுப்பம், எருமனுர், கார்குடல், செட்டவனம் உள்ளிட்ட கிராமங்களில் சிறு, குறு விவசாயிகள் நெல்லுக்கு போதிய விலை கிடைக்காததால் மாற்றுப்பயிரை பயிர் செய்து வருகின்றனர். இந்த நிலையில் காய்கறி பயிராக வெண்டைக்காய் சாகுபடி செய்து வரும் விவசாயிகள் கொரோனா தொற்று காரணமாக வெளிமாநில காய்கறி வியாபாரிகள் கொள்முதல் செய்யாததால் வெண்டைக்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

image

இந்நிலையில் சராசரியாக ஒரு கிலோ 12 ரூபாய் வரை விலை போன வெண்டைக்காய் தற்போது ஒரு கிலோ 2 ரூபாய்க்கு போகிறது. இதனால் வெண்டைக்காயை செடியிலிருந்து பறித்தால் கூலிக்கு கூட கட்டாது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். விலை வீழ்ச்சியின் காரணமாக வெண்டைக்காயை பறிக்காமல் கால்நடைகளுக்கு தீவனமாக விளைநிலத்தில் மாடுகளை கட்டி மேய்த்து வருகின்றனர் அப்பகுதி விவசாயிகள்.

காய்கறி பயிர்களுக்கு நிலையான விலை கிடைக்க தோட்டக்கலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/115157/Cuddalore-Vendaikai-prices-fall-It-is-a-pity-that-fodder-is-not-harvested.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா