தற்போதே தொடங்கிய 1-8 வகுப்புகள்: விதிகளை மீறும் தனியார் பள்ளிகள்?

தமிழ்நாட்டில் அரசின் விதிகளை மீறி, தனியார் பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வைக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
 
தமிழ்நாட்டில், மருத்துவ நிபுணர்கள் ஆலோசனைக்கு பின் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. அதேநேரத்தில் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் ஒன்று முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், சென்னையில் சில தனியார் பள்ளிகள் தற்போதே ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களை பள்ளிகளுக்கு வரவைப்பதாக புகார் எழுந்துள்ளது. கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே பள்ளிகள் திறக்கப்படுவதாக குற்றம்சாட்டுகிறார் தமிழ்நாடு பெற்றோர், மாணவர் நலச் சங்கத்தின் அருமைநாதன்.
 
image
மேலும், மாணவர் நலன் பின்னுக்கு தள்ளப்பட்டு பொருளாதாரம் முன்னிலைப்படுத்தப்படுவதும் காரணம் என்கிறார் கல்வியாளர் நெடுஞ்செழியன். கொரோனா நெருக்கடியை அனைவரும் எதிர்கொண்டுள்ள நிலையில் பாடத்திட்டமே குறிக்கோள் என்று செயல்படாமல் குழந்தைகள் உடல் நலன் மற்றும் கொரோனா பாதுகாப்பு வழிகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/118163/In-Tamil-Nadu-there-has-been-a-complaint-that-students-from-class-one-to-eight-are-being-allowed-to-come-to-school-in-violation-of-government-rules.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா