திருநெல்வேலி: தொடர் மழையால் ஒரே நாளில் 18 அடி உயர்ந்த கொடுமுடி அணை

தொடர் மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள கொடுமுடி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 18அடி உயர்ந்துள்ளது.
53அடி கொள்ளளவு கொண்ட கொடுமுடி அணையின் நீர்மட்டம் தற்போது 51அடியை எட்டியுள்ளது. இதனால், அணைக்கு வரும் 639கன அடி நீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு வருகிறது. மாலைக்குள் அணை முழு கொள்ளளவை எட்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொடுமுடி அணை நிரம்புவதால், களக்காடு, நாங்குநேரி, வள்ளியூர் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதனைப்படிக்க...விவசாயிகளிடம் நுண்ணூட்ட உரங்களை கட்டாயப்படுத்தி விற்றால் கடை உரிமம் ரத்து - அறிவிப்பு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/119253/Tirunelveli-Kodumudi-Dam-18-feet-high-in-one-day-due-to-continuous-rains.html
Comments
Post a Comment