'7.5% ஒதுக்கீட்டு மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது' - தொழில்நுட்பக் கல்வி இயக்ககம்

7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் எச்சரித்துள்ளது.

இட ஒதுக்கீட்டில் சேர்ந்துள்ள மாணவர்களின் விவரத்தை அனைத்து பொறியியல் கல்லூரிகளும், தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களிடம் இருந்து எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கப்படக்கூடாது என்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் லட்சுமி பிரியா எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 7.5 சதவிகித உள் இட ஒதுக்கீட்டின் கீழ் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்பதாக அறிவித்த நிலையில் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன.

இதனைப்படிக்க...4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/117794/Students-joining-the-7-5--quota-should-not-be-charged-Directorate-of-Technical-Education.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா