"நெல் கொள்முதல் நிலையங்களில் இணையவழி பதிவு முறையை ரத்து செய்க"- சீமான் அறிக்கை

நெல் கொள்முதல் நிலையங்களில் கட்டாய இணையவழி பதிவை ரத்து செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இன்னும் சில நாள்களில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கவிருப்பதால், ஆண்டுக் கணக்கு முடிப்பிற்காக மூடப்பட்டுள்ள கொள்முதல் நிலையங்களை விரைவில் திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்து வருவதாகவும் அக்கோரிக்கைகளுக்கு மத்தியில் விவசாயிகள் இணையம் வழியாக முன்பதிவு செய்ய வேண்டும், வங்கிக் கணக்கை இணைக்க வேண்டும் என அரசு அவர்களை சொல்வது ஏற்புடையதல்ல எனவும் சீமான் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.

image

இதுபற்றிய தனது அறிக்கையில், “ஏற்கெனவே போதிய அளவில் நெல் கொள்முதல் நிலையங்கள் இன்றி விளைந்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். அப்படியான நிலையில் எவ்வித முன்னறிவிப்புமில்லாத இந்த திடீர் உத்தரவு, நிர்வாக சீர்கேட்டை வெளிப்படுத்துகிறது. இணைய முன்பதிவு - வங்கிக்கணக்கு இணைப்பு ஆகியவற்றை அவசரகதியில் நடைமுறைக்கு கொண்டுவரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் முடிவு, எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

தொடர்புடைய செய்தி: நூறுநாள் வேலைத் திட்டம் விவசாயத்திற்கே ஆபத்தா?: சீமான் பேச்சும் உண்மை நிலவரமும்- ஓர் அலசல்

இணைய வழி முன்பதிவு முறையில் உள்ள நடைமுறை சிக்கலை கருத்தில் கொண்டு தற்காலிகமாக அதை அரசு திரும்ப பெற வேண்டும். மேலும் நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க தமிழக அரசு முன் வர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/117706/Seeman-opposes-Tamilnadu-government-e-registration-system-at-paddy-purchasing-centers.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா