சம்பா நெற்பயிரை காப்பீடு செய்யாதவர்கள் நாளைக்குள் பயிர் காப்பீடு செய்திடுக -தமிழ்நாடு அரசு

சம்பா நெற்பயிரை காப்பீடு செய்யாதவர்கள் நாளைக்குள் பயிர் காப்பீடு செய்திடுக என தமிழ்நாடு வேளாண், உழவர் நலத்துறை வேண்டுகொள் விடுத்துள்ளது. காப்பீட்டிற்கான கால அவகாசத்தை நீட்டிக்கக்கோரி மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்திருந்த நிலையில் இந்த வேண்டுகோளை வைத்துள்ளது.
2021 - 22ஆம் ஆண்டில் சம்பா நெற்பயிர்களுக்கு நாளைக்குள் காப்பீடு செய்ய வேண்டும். காப்பீடு செய்யாத விவசாயிகள் இன்றும் (14.11.21), நாளையும் (15.11.21) உரிய ஆவணங்களுடன் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு மையங்களை அணுகி பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/122116/Those-who-do-not-insure-samba-paddy-crop-should-insure-the-crop-by-tomorrow-request-to-Farmers-by-Government-of-Tamil-Nadu.html
Comments
Post a Comment