“இந்து சமய அறநிலையத்துறை புதிதாக கல்லூரிகள் தொடங்கக் கூடாது”- சென்னை உயர் நீதிமன்றம்

இந்து சமய அறநிலைய துறை சார்பில் புதிதாக கல்லூரிகள் தொடங்கக் கூடாது என்றும், ஏற்கனவே தொடஞ்கிய  கல்லூரிகளின் செயல்பாடு வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கும் தகவலில், “அறங்காவலர் இல்லாமல், நீதிமன்ற அனுமதியின்றி கூடுதல் கல்லூரிகள் தொடங்க அறநிலையத்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்ககூடாது. கல்லூரி தொடங்கிய ஒரு மாதத்துக்குள் இந்து மத வகுப்புகள் நடத்தாவிட்டால் கல்லூரிகளை தொடர்ந்து நடத்த முடியாது” எனக்கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி: நடப்பு கல்வியாண்டில் அரசு தொடங்கிவுள்ள அறநிலையத்துறை கல்லூரிகளுக்கு பெயர்கள் அறிவிப்பு

image

மேலும் கோவில் நிதியில் கல்லூரி தொடங்க தடை கோரி டி.ஆர்.ரமேஷ் வழக்கில் அரசு பதிலளிக்க வேண்டுமென்று கூறி, விசாரணையை 5 வாரம் தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/122168/Hindu-Religious---Charitable-Endowments-Department-should-not-start-new-colleges--says-Madras-High-Court.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா