முல்லை பெரியாறு அணை விவகாரம் - மதுரையில் விவசாயிகள் போராட்டம்

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசைக் கண்டித்து மதுரை மாவட்டம் மேலூரில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முல்லை பெரியாறு அணை பலவீனமாக உள்ளதாக கேரள அரசு பொய்ப்பிரச்சாரம் செய்வதாகவும், முல்லை பெரியாறு அணை பகுதியில் கேரள அரசியல்வாதிகள் அத்துமீறி நுழைந்ததாகவும் விவசாயிகள் குற்றஞ்சாட்டினர். 152 அடிவரை நீரை தேக்க வேண்டும், மத்திய தொழிலக படையின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். மதுரையின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி ராமநாதபுரம், தேனி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இருந்தும் வாகனங்களில் பேரணியாக வந்து திரளான விவசாயிகள், பொதுமக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர். விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் 62 கிராமங்களில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.

இதனைப்படிக்க..."கனமழைக்கு இதுவரை 4 பேர் உயிரிப்பு"- வருவாய்த்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தகவல் 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/121469/Mullaperiyaru-Dam-issue-Farmers-protest-in-Madurai.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா