திண்டுக்கல்: தொடர்மழையால் கருகிய மல்லிகைச் செடிகள்... அழுகிய மலர்கள்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் தொடர் மழையால் மல்லிகைச் செடிகள் கருகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதனால் மார்க்கெட்டுக்கு மல்லிகையின் வரத்து பெரிதும் குறைந்து விலை ஒரு கிலோ 3 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. நிலக்கோட்டை, வத்தலகுண்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மல்லிகை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இடைவிடாது பெய்துவரும் மழையால் மல்லிகைச் செடிகளை கருகல் நோய் தாக்கி மலர்கள் வீணாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் பெருமளவில் இழப்பைச் சந்தித்துள்ளதாகவும் அவர்கள் கவலையுடன் கூறுகின்றனர்.
குருபெயர்ச்சி: தமிழகத்தில் உள்ள பிரசித்திபெற்ற குருதலங்களில் சிறப்பு வழிபாடு
இதனால் தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஆகவே, அழுகல் நோயைக் கட்டுப்படுத்த வேளாண்துறையினர் தங்களுக்கு உதவிட வேண்டும் என்றும் மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/122057/Jasmine-plants-withered-and-flowers-rotten-by-continuous-rain.html
Comments
Post a Comment